எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு

Tuesday, July 16, 2019




தமிழக அரசுப்பள்ளிகளில்  10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து  வருகிறது.

 இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் என்ற நிலை நீடித்து வருகிறது.எனவே, உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை பணி நிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்கு  மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக உபரி ஆசிரியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிய வந்தது. இவர்களை வேறு பள்ளிகளுக்கு கவுன்சலிங் மூலம் பணிநிரவல் செய்வதற்கான  முறையான அரசின் உத்தரவு கடந்த மாதம் 20ம் தேதி முடிவானது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம்  செய்யவும், மற்றவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம்செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One