எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு

Saturday, April 28, 2018

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 தமிழக பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளன. பொது தேர்வுகளின் விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. மே, மூன்றாவது வாரம் முதல், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஜூன், 1ல், புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்க உள்ளன. அதற்கு முன், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்கட்டமைப்புகளை சோதனையிட, பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை, அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்ளதா என, சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்கள் பள்ளி வளாகத்திற்கு சென்று, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One