எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம்

Friday, April 20, 2018

தமிழக உயர் கல்வித் துறையில், முறைகேடு கள் அதிகரித்துள்ளதால், உயர் கல்வி செயலரை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உயர் கல்வி ,செயலரை, மாற்ற ,அரசு, திட்டம்,  நிர்மலாதேவி விவகாரத்தில், நீளும், விசாரணைதமிழக உயர் கல்வித்துறை செயலராக, சுனில் பாலிவால், ஓராண்டுக்கு முன் நியமிக்கப் பட்டார். இவர், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை, நிர்மலாதேவி விவகாரத்தில், ஒரு மாதம் முன்னரே புகார் வந்தும், விசாரணை நடத்தாமல், உயர் கல்வி செயலர், மெத்தன மாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.நிர்மலா தேவி, மார்ச், 15ல், மாணவியரிடம் பேசியுள்ளார். மார்ச், 19ல், கல்லுாரி நிர்வாகத் திடம் தகவல் தரப்பட்டுள்ளது. அப்போதே, மதுரை காமராஜர்பல்கலைக்கும், அதை தொடர்ந்து, உயர் கல்வி செயலகத்துக்கும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், போலீசில் புகார் அளிக்க, உயர் கல்வி செயலர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி, கவர்னர் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பிறகே, கவர்னர் அலுவலகத்துக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உயர் கல்வி செயலகம் வரை விசாரணை நடத்த, கவர்னர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர் கல்வி செயலரை மாற்றவும்,தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, உயர் கல்வித்துறை சங்கத்தினர் கூறியதாவது:மதுரை காமராஜர் பல்கலை அதிகாரிகள் பற்றியும்,கவர்னர்குறித்தும், நிர்மலாதேவி பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியர், கல்லுாரியில் புகார் அளித்தபோதே, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கவர்னர் மீது, தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்காது.

 இந்த விவகாரத்தில், உயர் கல்வி செயலர், மவுனமாக இருந்தது ஏன்?பல பல்கலைகளில், துணைவேந்தர் இல்லாத நேரங்களில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவுக்கு, தன்னையே தலைவராகநியமித்து, பல்கலை நிர்வாகத்தில், ஆதிக்கம் செலுத்துவதையே, உயர் கல்வித்துறை செயலர் அதிகம் விரும்புகிறார். சென்னை பல்கலையில், பட்டமளிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், தன் கையெழுத்து இடம்பெற முயற்சி எடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.உயர் கல்வித்துறை பிரச்னைகள் குறித்து, பேராசிரியர் சங்கங்களின் சார்பில், செயலகத்தில் அளித்த புகார்கள்கிடப்பில் போடப் படுகின்றன. உயர் கல்வியில் நடக்கும்ஊழல்களை களைய, உயர் அதிகாரம் உடைய அமைப்பை உருவாக்க வேண்டும் என, பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர், தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையில், பல்வேறு முறைகேடுகளை, துணை வேந்தர் துரைசாமி கண்டறிந்தார். அவற்றின் மீது, உயர் கல்வி செயலர், எந்த விசாரணையும் நடத்தவில்லை. கோவை பாரதியார் பல்கலையின் முறைகேடு கள் குறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரி நிர்வாகத்தினர், பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி யாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையிட்ட பிறகே, ஊழல் அம்பலமானது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஏற்பட்ட ஊழல் குறித்தும், தனி விசாரணை நடத்தவில்லை. பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியிடும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஆனால், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப் புக்கான, விண்ணப்ப பதிவு தேதியை, முடிவு செய்யாமல், உயர் கல்வி செயலகம் காலம் தாழ்த்துகிறது.

அண்ணா பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், பேராசிரியர் நியமனம் குறித்து, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One