எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உறுதி

Tuesday, June 12, 2018

அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,000 வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,000 வழங்கப்படுகிறது.
ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்படும் இந்த குறைந்தபட்ச ஊதியத்தையும் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாக செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒப்பந்த செவிலியர்கள் முழுமனதுடன் தங்களது பணிகளில் ஈடுபடவில்லை. எனவே, ஒப்பந்த செவிலியர்களின் ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவிசாரணையில் இன்று அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One