எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எம்.பி.பி.எஸ்.: காத்திருப்போர் பட்டியலில் 1,469 மாணவர்கள்

Monday, July 9, 2018

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் மொத்தம் 1,469 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7-ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்தது.
இதில் மொத்தம் 5,397 மாணவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் 1,415 மாணவர்கள் பங்கற்கவில்லை. கலந்தாய்வுக்கு வந்த பிறகு, 21 மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்யவில்லை. முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு 1,469 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகள்-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் இடங்கள் என 2,639 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 862 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு 669 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One