விருதுநகரில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார்.
காமராஜரின் பிறந்தநாளை நாடார் மஹாஜன சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கல்வித் திருவிழாவாக நடத்தி வருகிறது. நிகழ் ஆண்டு விருதுநகரில் உள்ள கே.வி.சாலா மேல்நிலைப் பள்ளியில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பேசுகிறார். நாடார் மஹாஜன சங்க பொதுச் செயலர் ஜி.கரிக்கோல்ராஜ் வரவேற்கிறார். தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, கடம்பூர் செ.ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி, க.பாண்டியராஜன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
முதல்வர் வருகையையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நாடார் மஹாஜன சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment