எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றம்! -அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

Friday, July 20, 2018

அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும்ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில்நிறைவேற்றப்பட்டது.

 இச்சட்டத்தின்படி, 1 முதல், 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவியர், 'பெயில்' ஆக்கப்படாமல், அடுத்த வகுப்புக்குஅனுப்பப்படுவர். இது, 'அனைவரும் தேர்ச்சி' திட்டம்என்றழைக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த சட்டத்தில் திருத்தம்செய்வதற்கான மசோதாவை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஅமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் தாக்கல் செய்துபேசியதாவது:பள்ளிகளில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, அனைவரும்தேர்ச்சி திட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆண்டு இறுதி தேர்வில்தோல்வியடைந்த, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டுமாதங்களுக்கு பின், மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வில்தோல்வியடையும் மாணவர்களை, மீண்டும் அதே வகுப்பில் படிக்கவைக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.


தோல்வி அடைந்த மாணவர்கள், பள்ளியை விட்டு நீக்கப்படமாட்டார்கள்.இருப்பினும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தைபின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவுசெய்துகொள்ளலாம். அதுபோல, தோல்வி யடைந்த மாணவர்களுக்குமறுதேர்வு நடத்துவது குறித்தும் மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்தியஅரசு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர், மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One