எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Phonetic முறையில் ஆங்கிலம் வாசிக்க புத்தகம் வெளியீடு..

Saturday, July 7, 2018





🌹புத்தக வெளியீட்டு விழா🌹

👉07.07.2018 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சிராப்பள்ளயில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்ததில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

 👉திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதியுடன் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திரு.சுகுமார் தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார்.

👉மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.கா.மருதநாயகம் நூலினை வெளியிட்டு சிறப்புரையும், கலவைச்சோறு அமைப்பின் நிறுவனர் திரு.எபி.மனோ அவர்கள் பெற்றுக்கொண்டு நூலினைப்பற்றிய கருத்துரையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

👉இறுதியாக நன்றியுரை நூலாசிரியர்  திரு.கு.செல்வக்குமார் வழங்கினார்.

👉பின்பு இந்நூல் வெளியீட்டு விழாவின் நோக்கம் மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறன் வளர்வதற்கு நூலினை வெளியிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கவேண்டும் என்பதே.

👉விடுமுறை நாளில் தன்னார்வமாக சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 16 ஒன்றியங்களிலிருந்தும், கரூர்,ஈரோடு,அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்தும் கலந்து கொண்டு அரங்கமே அதிர்ந்தது.

👉இந்த நூலானது எளிமையாக உரிய ஒலிப்புமுறையுடன், மாணவர்கள புரிந்து கொள்ளும்படியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

👉எந்தவிதமான கட்டணமும் இன்றி சேவை மனப்பான்மையுடன் ஏற்பாடு செய்து இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறன் உயரவேண்டும் என்பதே ஆகும். ஆசிரியர்களுக்கு முழுமையான நேரடியான பயிற்சியானது,திரு.ஸ்டனிஸ் ரத்தினம் மற்றும் திரு.கு.செல்வக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது.

 👉விழா மற்றும் பயிற்சி ஏற்பாடுகளை திரு.ரூஸ்வெல்ட் செய்திருந்தார்.

 👉அனைத்து ஆசிரியப்பெருமக்களும் இதனை மாணவர்களுக்கு கொண்டு சென்று மாணவர்கள் ஆங்கில மொழியை செப்டம்பர் மாதத்திற்குள் தங்களது பள்ளியில் சாதிப்போம் என்கிற உறுதிமொழியுடன் இனிதே விழா நிறைவுற்றது.

👉வரலாற்று சாதனையாய், மிகப் பெரிய அளவில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியுடன் சென்றது மனநிறைவுடன் இருந்தது.

👉எங்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகம் இலாப நோக்கம் இல்லாமல் உற்பத்தி விலையில் மட்டுமே வழங்கப்படும். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

🥀இவண்🥀
 கு. செல்வக்குமார் இ.நி.ஆ,
ஊ.ஒ.தொ.பள்ளி கோட்டைப்பளுவஞ்சி,
மருங்காபுரி ஒன்றியம்,
 திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
 8122440081

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One