எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் நடந்த உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி

Thursday, March 29, 2018










“நாணயங்கள் என்பவை உலகைச்சுற்றிவரும்  வாலில்லாப்
பறவைகள்”. என்பது வேடிக்கையான வார்த்தைகள். ஆனால் அது தான் உண்மை ....உலகநாடுகள் அனைத்தும் தங்களுக்கென்று தனித்தனியாக  நாணயங்களை கொண்டிருக்கின்றன ............செல்லாக்காசுகள்  என்று பிறரால் எள்ளிநகையாடப்படும்  நாணயங்கள்  இன்று நாணய சேகரிப்பாளர்களின்  செல்லப்பிள்ளையாய் அவர்தம் சேமிப்பில் சிரித்துக்கொண்டு இருக்கின்றன....நாணயங்கள்  என்பவை வரலாற்றைச்சொல்லித்தர உதவும் வற்றாதவளங்கள் என்றால் அது மிகையில்லை ..நாணயச்சேகரிப்பின் மூலம் நாம் பல்வேறு தலைவர்களின் வரலாறு முதல்
எண்ணிலடங்கா பல அரிய தகவல்களையும்  அறிந்துகொள்ள முடிகிறது ....ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூரில் ,    கன்மலை அறக்கட்டளை நடத்திய உலகப்பணதாள்கள் மற்றும் நாணயக்கண்காட்சி -2018...24-03-18. காலை 10.00 மணி. முதல் 2.00 மணி வரை நடைப்பெற்றது. இக்கண்காட்சியை 300 பள்ளி மாணவர்கள் மற்றும் 75 ஆசிரியர்கள் கண்டுகளித்தனர் .நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தி.முத்துசெல்வம் அவர்கள் (முன்னாள் கல்வி குழு தலைவர் . ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி)கலந்துக்கொண்டார் .நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யோகா விஜய் ,சிலம்பம் கார்த்திக் , பூபேஸ் ,ஆனந்த் , பிரேம் ,சந்தியா ,ஸ்டீவ் வாட்சன்ஆகியோர் கலந்துக்கொண்டனர் .....

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One