எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இந்தியாவில் மருத்துவம் படித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல டாக்டர்களுக்கு கட்டுப்பாடு

Monday, March 26, 2018

தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி ஆராய சுகாதாரம் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது.

பாராளுமன்ற நிலைகுழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இந்தியாவில் வரி செலுத்துவோரின் பணத்தில் படித்து டாக்டர் ஆனவர்கள், வாய்ப்பு கிடைத்தவுடன் வெளிநாட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, குறைந்தபட்சமாக குறிப்பிட்ட காலத்துக்கு டாக்டர்கள் உள்நாட்டில் பணியாற்றுவதை கட்டாயம் ஆக்க வேண்டும்’’ என்று அக்குழு சிபாரிசு செய்துள்ளது.

மேலும், ‘‘கிராமப்புறங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்த பிறகு, கிராமப்புறங்களில் டாக்டர்கள் ஓராண்டு பணிபுரிவதை கட்டாயம் ஆக்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணையத்தில் நியமிக்கப்படுபவர்கள், தங்களது தொழில் மற்றும் வர்த்தக தொடர்புகளை வெளியிடச்செய்ய வேண்டும், பல் மருத்துவ கவுன்சில், நர்சிங் கவுன்சில் ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட வேண்டும்’’ என்றும் சிபாரிசு செய்துள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One