எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல்

Saturday, April 21, 2018


*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*

*அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.*

 நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *மாநில தலைவர்* திரு.வெ.முருகதாஸ்  அவர்கள் தலைமையில் *இன்று  (21/04/2018)* காலை  மாண்புமிகு *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* அவர்களை  கோபிசெட்டிபாளையம் *தோட்ட இல்லத்தில்* சந்தித்தோம் அப்பொழுது நமது *பணியிட மாறுதல்* மற்றும் *ஊதிய உயர்வு* குறித்து *நினைவுப்படுத்தினோம் இது குறித்து நான் நேற்று கூட நிதித்துறை  செயலாளர்* அவர்களிடம் *விவாதித்ததாகவும்* இதற்கான *அறிவிப்பு மிகவிரைவில் வரும்* என்றும் , *பணியிட மாறுதல் குறித்து கேட்டதற்கு* பொது தேர்வு *விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு* பெற்றதும் அந்தந்த *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தாம் அலுவலக பணிக்கு திரும்பியதும் இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்*

இப்படிக்கு

*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வின் முன்னேற்ற பாதைக்கான களப்பணியில் இன்று கலந்து கொண்டவர்கள்* என்றும் உங்கள் உடன்
*வெ.முருகதாஸ்*
மாநில தலைவர்
*ப.ஜெகதீசன்* மாநில செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள்       *சு.இளவரசன், மாநில அமைப்பு செயலாளர்* *க.பெரியசாமி, சி.ஜவஹர், எஸ்.ஷகிலாதேவி அ.சீனுவாசன்,* மற்றும்
*ஈரோடு மாவட்ட*   *ராதாகிருஷ்ணன், சந்தோஷ்*
*தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்*

1 comment

  1. மறுபடியும் ஊதிய உயர்வு தான? இப்படியே Retired ஆகிவிட வேண்டியதுதான்!!!

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One