பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு மே 26-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜாராம் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைகழகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பெங்களூரு ஐ.ஐ.டி. இயக்குனராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். மேலும் இந்திய அறிவியல் மையத்தில் 24 ஆண்டுகள் பேராசியராகவும் பணியாற்றி உள்ளார்.
150 ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ள இவர், உலோக பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment