எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மானியக்கோரிக்கையில் மாற்றம் வருமா? தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!!

Wednesday, May 30, 2018

7வது கல்வி ஆண்டைநிறைவுசெய்யும்  12000க்கும்மேலான தொகுப்பூதிய பகுதிநேரஆசிரியர்களுக்கு(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட்மானியக்கோரிக்கையில் தமிழகஅரசு  புதிய அறிவிப்புகளைவெளியிட வலியுறுத்தல்.

மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டி கல்விஅமைச்சர்,பள்ளிக்கல்வி முதன்மை செயலர்மற்றும் அனைவருக்கும்கல்விஇயக்க மாநில திட்டஇயக்குநர் ஆகியோரை கடந்தஏப்ரல் மற்றும் நடப்பு மேமாதத்தில் நேரில் சந்தித்துகோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.பரிசீலித்து வருவதாக அமைச்சர்மற்றும் செயலர் அவர்களும்நம்பிக்கை அளித்து இருந்தனர்.ஆனால் மே மாதத்திற்கு ஊதியம்தரவேண்டியது குறித்துஉத்தரவுகள் வரவில்லை எனஅனைவருக்கும் கல்வி இயக்கஅதிகாரிகள் சொல்கிறார்கள்.எனவே மே மாதம் ஊதியம்தருவது குறித்து செயல்முறைஆணைகளை உடனடியாகவெளியிடவேண்டும்.

வருகின்ற ஜீன் மாதத்தில்பணிமாறுதல் நடத்தஅனைவருக்கும் கல்வி இயக்கம்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.எனவே ஏற்கனவே 25.10.2017ல்கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர் இருப்பிடபகுதிக்கு அருகில்அனைவருக்கும் பணிமாறுதல்தருவதாக சொன்னபடி விரைந்துநடமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட 7வதுஊதியக்கமிஷன் 30% ஊதியஉயர்வுடன் சேர்த்து கணிசமானஊதிய உயர்வு மற்றும் அனைத்துவேலைநாட்களிலும் முழுநேரவேலை குறித்தஅரசாணைகளை வெளியிட்டுஇந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே அரசு வெளியிட அனைவரும்வலியுறுத்தி வருகின்றனர்என்பதை கூடுதல் கவனம்செலுத்தி ஆவன செய்திடவேண்டும்.


ஊதிய முரண்பாடுகளைகலைய வலியுறுத்தும் ஒருநபர்குழுவிடம் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஅனைத்து வேலைநாட்களிலும்முழுநேரப்பணியுடன்சிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்த கோரிக்கை மனுஅளிக்கப்பட்டுள்ளது. எனவேதமிழக அரசு இந்ததருணத்திலாவது தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வுடன்கூடியநிலையான வேலையைஉறுதிசெய்து அறிவிப்புகளைபுதிய அரசாணையைவெளியிடவேண்டும்.

ஏற்கனவே ஜீன், ஜீலை2017ல் நடைபெற்ற  சட்டமன்றகூட்டத்தொடரில் தொகுப்பூதியபகுதிநேர ஆசிரியர்களுக்குஊதிய உயர்வு மற்றும்பணிநிரந்தரம் குறித்த திமுகஉறுப்பினர்களின்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர்பணிநிரந்தரம் செய்ய அரசுபரிசீலித்து வருகிறது என்றும்,பணிநிரந்தரம் செய்ய கமிட்டிஅமைக்கப்டும் எனவும்பதிலளித்துள்ளதை விரைந்துசெயல்படுத்த வேண்டும். மேலும்ஜனவரி 2018ல் நடைபெற்றகூட்டத்தொடரில் வேடச்சந்தூர்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்பரமசிவம் பகுதிநேரஆசிரியர்களுக்கு தற்போதுதரப்பட்டுவரும்தொகுப்பூதியமான ரூ.7700/-ஊதியத்தை உயர்த்தி தரவலியுறுத்தியதைகூட அரசுநடைமுறைப்படுத்தாமல் உள்ளதுவேதனையளிக்கிறது.


தமிழக முதல்வரை சந்தித்தபோது (2.11.2017)குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போராட்ட நாட்களில் 100%அளவில் பள்ளிகளை இயக்கிட அரசு உத்தரவிட்டு பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமும் முழுஅளவில் பயன்படுத்தியதை அங்கீகரித்து, தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும் ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.

 இவன், செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,செல் : 9487257203

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One