எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு வலுத்த கண்டனம்

Friday, June 29, 2018

பணியிட மாற்றம் கேட்ட ஆசிரியரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற போது உத்தர பகுகுணா என்ற பெண் அவரை அணுகினார்.


  தாம் உத்தரகாசியில் ஒரு ஊரக பகுதியில் அரசு பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியையாக உள்ளதாகவும், தனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கூறிய ஆசிரியையை  முதலமைச்சர் கடிந்து கொண்டதோடு, கைது செய்யவும் உத்தரவிட்டார்.

தமது கோரிக்கைக்கு பதில் அளிகாததற்கு காரணம் கேட்டதற்கு உடனடியாக தன்னை சஸ்பெண்ட் செய்து, கைது செய்யுமாறு போலீசாருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும்  அந்த பெண் அழுதபடியே குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியை உத்தர பகுகுணா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட வந்த ஆசிரியையை கைது செய்ய உத்தரவிட்டதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு அம்மாநில எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One