எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை

Monday, August 13, 2018

சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.

பல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One