எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ்2 செய்முறை தேர்வு தேதி மாறுமா?

Monday, January 28, 2019




செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, தேர்வு நடைபெறும். பிப்.,1ம் தேதி முதல், 12ம் தேதிக்குள், இத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டுமென, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, பொதுத்தேர்வு மாணவர்களை தயார்ப்படுத்தும் முயற்சியில், கல்வித்துறை இறங்கியுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போராட்டங்களால் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One