ஜாக்டோ- ஜியோ வழக்கு விசாரணையின் போது அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். அரசு - தனியார் ஊழியர்களுக்கு இடையே ஊதியத்தில் பெரும் பாகுபாடு இருப்பது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டால் என்ன? என்றும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment