எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை: ஆகஸ்டில் வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டம்

Friday, May 31, 2019




உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நகர, ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளுக்கான முதன்மை பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன. மாவட்டந்தோறும், முதன்மை பயிற்றுநர்கள் அனைவரும் பிற ஊழியர்கள், பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்த பயிற்சிகளை அளிப்பர்.
இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்கவும், அதன் பின்பு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இல்லை: இதேபோன்று, நகரப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது எனவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One