எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நான்கு மாத அகவிலைப்படி இந்த மாதம் வழங்கப்படுகிறது

Tuesday, May 28, 2019




தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் கல்வவித்துறையில் பணியாற்று ஆசிரியர்களுக்கு இந்த மாத இறுதியில் நான்கு மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அகவிலை படி வழங்கி வருகிறது. மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசும் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 19 ம் தேதி கருவுலத்துறைக்கு உத்தரவிட்டும் கூட இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை

இந்நிலையில் நிலுவை தொகை இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையை பொருத்தவரையில் ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஊதிய உத்தரவுகளை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்யாவிட்டால் அடுத்த மாதம் சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 2, 7 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One