மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் மேலூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுரை விளாச்சேரியில் உள்ள இந்தியன் 3சி பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அதே பள்ளியை சேர்ந்த மாணவர் தேவநாத் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, இடைநிலை ஆசிரியரும் மாணவர்களின் பயிற்சியாளருமான செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
Wednesday, May 8, 2019
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் மேலூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுரை விளாச்சேரியில் உள்ள இந்தியன் 3சி பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மேலூர் அருகில் உள்ள அ.செட்டியார்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அதே பள்ளியை சேர்ந்த மாணவர் தேவநாத் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, இடைநிலை ஆசிரியரும் மாணவர்களின் பயிற்சியாளருமான செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் பாராட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment