எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு "நாளைய கலாம் விருது"

Monday, July 29, 2019


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த. இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், 'நாளைய கலாம் விருது' வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் நினைவையொட்டி, காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில், அறிவியல் துறையில் சிறந்து விளங்கும், மாவட்டத்திற்கு இரு அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நாளைய கலாம் விருது' வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் ஆர்.விமல்ராஜ், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரவீன்குமாருக்கு, ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர், சுப்பையா, சமத்துவ வழக்கறிஞர் சங்க நிறுவனர், பார்வேந்தன், காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர், நிறுவனர் லாரன்ஸ் ஆகியோர் விருது வழங்கினர்.அங்கம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு, அறிவியல் ஆசிரியர் சேகர், ஆசிரியர் சரவணன், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One