அச்சரப்பாக்கம் ஒன்றியம் ஊ.ஒ.ஆ.பள்ளி, கோழியாலம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விக்னேஸ்வரன் தனது நண்பர்களுடன் இணைந்து பல புதுமைகளை தனது பள்ளியில் செயல்படுத்தி வருகிறார்.. ஆசிரியர் விக்னேஸ்வரன் அவர்களது திருமணம் இன்று (8.9.19) காலை மிக எளிமையாக உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் மணமக்கள், அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்று காம்பவுன்ட் சுவர், பள்ளி கேட் ஆகியவற்றையும் , 25000 விதைபந்துகளையும் நன்கொடையாக அளித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கும் விருந்து அளித்தனர்..
அரசு பள்ளி ஆசிரியரின் சமூகப் பார்வையும், அரசு பள்ளி மற்றும் மாணவர்கள் மேல் கொண்டுள்ள ஈர்ப்பும் பாராட்டத் தக்கது என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..
No comments:
Post a Comment