எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.19

Tuesday, November 26, 2019


திருக்குறள்

அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம்:

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

பழமொழி

Abused patience turns to fury .

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

கண் இருந்தாலும் இருளைக் கடக்க ஒரு வெளிச்சம் தேவை. அது போல் கல்வியும் நம் வாழ்வை கடக்க தேவை.

------- மகாத்மா காந்தி

பொது அறிவு

நவம்பர் 25 - இன்று தேசிய சட்ட தினம்

1. 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' என போற்றப்படுபவர் யார்?
 டாக்டர்.பி்.ஆர்.அம்பேத்கர்.




2. இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின் முதல் சட்ட  அமைச்சராகப்  பொறுப்பேற்றவர் யார்?
 டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்.

English words & meanings

Oology – study of eggs. முட்டைகள் மற்றும் கூடுகள் குறித்த ஆய்வு.

Octagonal - eight sided.
எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய

ஆரோக்ய வாழ்வு

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை அடிக்கடி உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

Some important  abbreviations for students

re.    =  regarding, about

sim. =  similar

நீதிக்கதை

நல்ல நண்பன் வேண்டும்


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

26.11.19

* ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் வேடந்தாங்கல் பறவைகளுக்குத் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம் என தன் சொந்த செலவில் ஊரையே பசுமையாக்கி வருகிறார் அமெரிக்கத் தமிழர் நரேந்திரன். இவர் கரூர் மாவட்ட வேப்பங்குடியைச் சேர்ந்தவர்.

* பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

* கோவை மாவட்டம் செஞ்சேரிப்புத்துார் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பனை விதை நடவில் ஈடுபட்டு வருகின்றனர்.

*இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அறிவிப்பு.

*  2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஹாக்கி அணிகளின் பிரிவுகளை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) வெளியிட்டுள்ளது.

Today's Headlines

🌸 Due to the Medical wastes dumped in the  vedanthangal lake,  birds are in danger of infectious diseases.

 🌸House-to-House Vegetable Garden;  Orchard around the town!  A colourful sight to the visitors - Narendran, an American Tamilian who greened the town at his own expense.  He hails from Veppankudi in Karur district.

 🌸Agriculture Department invites farmers to insure their crops.

 🌸Students of Chenjeriputhur Government Primary School plant palm seeds after the school hours.

 🌸Steps  are taken to host day-night Test in all parts of India: says ICC president Ganguly.

🌸The International Hockey Federation (FIH) has released sections of its hockey teams for the 2020 Tokyo Olympic Games.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One