எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Tuesday, January 28, 2020




ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் அடிப்படையில் இந்த நிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது .

மேற்கூறப்பட்ட தொகையானது கீழ்க்காணும் கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும் .

2202 General Education - 02 Secondary Education - 107 Scholarships - State ' s Expenditure - AA National Scholarships at the secondary stage For Talented Children From Rural Areas - 312 Scholarship and Stipends - 09 others

New IFHRMS DP code - ( 2202 - 02 - 107 - AA 31209 )

Old DP code - ( 2202 - 02 - 107 - AA 1290 )

மேற்காணும் படிப்புதவித் தொகை 9 , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொடர்ந்து பயில்வதற்காக மட்டுமே ஒவ்வொறு மாணவ / மாணவிக்கும் ரூ . 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) வீதம் காசோலையாக வழங்கப்பட வேண்டுமென அரசாணை எண் . 960 பள்ளிக் கல்வித்துறை ( இ2 ) நாள் 11 . 10 . 1991 - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு தற்போது ரூ . 1 , 00 , 000 / - என பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ . 12 , 000 / - லிருந்து ரூ . 1 , 00 , 000 / - வரை உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் கிராமப்புறத்தைவிட்டு நகர்புறத்திற்கு சென்றலோ , மதிப்பெண் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலோ அல்லது பாலிடெக்னிக் கல்லூரி போன்ற பிற கல்வி நிலையங்களுக்குப் பயிலச் சென்று விட்டாலோ அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது . உதவித் தொகை 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் . மேற்காணும் படிப்பு உதவித் தொகை 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு மட்டுமே அரசாணை எண் . 960 கல்வித்துறை நாள் 11 . 10 . 1991 - ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் .



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One