எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.20

Wednesday, February 26, 2020




திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

விளக்கம்:

தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

பழமொழி

where there is anger, there will be excellent qualities .

 கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வேண்டாம் என விலகி இருப்பதே மனப் பக்குவத்தின் வெளிப்பாடு....

பொது அறிவு

1. மரியன்னா தீவுகள் எங்கு அமைந்துள்ளது?

பசிபிக் பெருங்கடலில்

2. உலகின் ஆழமான அகழி எது?

மரியன்னா அகழி

English words & meanings

Bale - a large quantity of something pressed tightly together and tied up. ஒரு பொருளின் பெருங்கட்டு.

Bail - money paid to make some one go free for certain period. கைதிக்கு கொடுக்க படும் பிணைய தொகை.

ஆரோக்ய வாழ்வு

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உண்டு வந்தால் ரத்தசோகை ,ரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Some important  abbreviations for students

POV - Point of view

BTW - By the way

நீதிக்கதை

விடா முயற்சி

குறள் :
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

விளக்கம் :
செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.

கதை :
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே.

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

26.02.20

◆ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் மறைமுகத் தேர்தலின்போது நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 4-ல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

◆தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடாமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் குரூர் எழுதிய மலையாள நாவலை நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

 ◆ இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப், டெல்லி அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மகிழ்ச்சியான பாடத்திட்டம் குறித்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

◆இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

◆குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியம்
உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற புகழை அடைந்துள்ளது. இந்த ஸ்டேடியம் 4 ஆண்டுகளில் அதிநவீனமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

◆பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் உள்ளூா் வீரா் ஹருடியுனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா் இந்தியாவின் 13 வயது கிராண்ட்ஸ் மாஸ்டா் டி.குகேஷ்.

Today's Headlines

🌸🌸Tamilnadu Election Commission said that the stopped indirect election for 105 seats will be held on March 4th.

 🌸Sakitya Academy Award for Best Translation in Tamil has been announced to the writer K. V .Jayasri . The award is given for the  translation of the Malayalam novel by Manoj Kurur titled " Nilam Poothu malarntha  naal"

  🌸Melania Trump, wife of US President who is on a visit to India, visited Delhi Government School.  She discussed with the school students about the happy curriculum.

 🌸Flooding has caused heavy rainfall in the Indonesian capital of Jakarta.  Officials said thousands of people were affected by the floods.

 🌸Modera Stadium, built in Ahmedabad, Gujarat is the largest in the world.  The stadium has been built with ultra modern technology with in 4 years.

🌸 India's 13-year-old Grand Master Mukesh Dukesh won the championship in the final of the Cannes Open chess tournament in Cannes, France.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One