எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Sunday, February 23, 2020




தனியார் நிறுவனங்கள் நிதியுதவியுடன் நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் வழங்கும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் 35 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதே வழிமுறையில்நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கொண்டுவந்தபோது, அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், 97 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். நீட்தேர்வுக்கு தேவையான பாடங்கள், பிளஸ் 2 பாடப் புத்தகத்திலேயே உள்ளன என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One