எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ; பள்ளி கல்வித்துறை ஆலோசனை

Wednesday, April 29, 2020




பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்குவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.அதேநேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில், அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணியை துவங்க, தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, இப்பணி வழங்குவதையும்; அப்பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் துவங்குவதையும் நிறுத்தி வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், முகக் கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும்; வீட்டில் இருந்து, விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக, அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும்.விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப் அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும் என, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One