எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நூலகப்புத்தகம்

Wednesday, September 14, 2022

5th std 2 nd term English All Lesson Video

Tuesday, October 19, 2021

சத்யம் பயோ கம்பெனி குழுவின் நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview)

Saturday, September 4, 2021



கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியான புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 02.09.2021 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு 2021 (Campus Interview) காணொளிக் காட்சி மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த சத்யம் பயோ கம்பெனி குழுவானது (Sathyam Group of Companies, Madurai) நேர்முகத் தேர்வினை நடத்தியது.

இந்த காணொளிக் காட்சி நேர்முகத் தேர்வில், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் மாணவர்கள் பலர் மதுரை – சத்யம் பயோ கம்பெனியின் களப்பணி அலுவலர் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பாளராக தேர்வு பெற்றுள்ளனர். வருகின்ற  அக்டோபர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தங்களது கிளை நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மதுரை – சத்யம் பயோ கம்பெனி தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு படித்து முடித்ததும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த  நேர்முகத் தேர்வினை, புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஜெ.பிரசாந்த், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு பொறுப்பு வகிக்கும் N. திவ்யபாரதி மற்றும் சத்யம் குழுமத்தின்  மனிதவள மேம்பாட்டுத் தலைவர் திரு. P. அருள் ஜெனித் ராஜ், MBA.,  மற்றும் மனிதவள மேம்பாட்டு மூத்த நிர்வாகி திரு. K. வடிவேல்கார்த்திக், MBA.,அவர்களும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வினை கல்லூரியின் செயலாளர் திரு. M. ராஜாராம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் V. செல்லமுத்து அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.

சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..

Sunday, August 15, 2021







சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..


வத்ராப்,ஆக.15:சுதந்திர தினநாளில் தூய்மைப் பணியாளர்களையும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரையும்  கௌரவித்த நெடுங்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலால் பொதுமக்கள் பயந்து கொண்டிருந்த வேலையில் நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்..நேரம் காலம் பார்க்காமல் தூய்மைப் பணிகள் ,கிருமி நாசினி,பிளிச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.


இவ்வாறு  கொரோனாவுக்கு மத்தியில் சிறப்பாக  தூய்மைப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை சுதந்திரதின விழாவில்  (ஆகஸ்ட் 15 ஆம்தேதி)  விருதுநகர் மாவட்டம் ,வத்ராப் ஒன்றியம்,நெடுங்குளம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் வத்ராப்  வட்டாரகல்வி அலுவலர் செல்வலட்சுமி முன்னிலையில்  துப்புரவு பணியாளர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், புத்தாடை வழங்கியும் அப்பள்ளி ஆசிரியர்கள்  கௌரவித்தனர்.  


முன்னதாக கொரோனா காலகட்டத்தில் கற்றல் நடைபெறாத சூழ்நிலையிலும் ஆசிரியர்களால் இணையவழியில் கொடுத்த பயிற்சியினை பயன்படுத்தி

தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற அகிலன் என்ற  மாணவனுக்கு   கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் , கல்வி ஊக்கதொகை அப்பள்ளி ஆசிரியர்களால்  வழங்கப்பட்டது.


மேலும் சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு வட்டாரக் கல்வி அலுவலர் செல்வலட்சுமி  அவர்கள் பள்ளிவளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டினார்.பின்னர் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் விழாவிற்கு வந்திருந்த பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் மற்றும் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது. 


இவ்வாறு சுதந்திர தின நாளன்று தூய்மைப்பணியாளர்கள்,பள்ளி மாணவன் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில்  நடைபெற்ற  இந்த முப்பெரு விழாவை நடத்திய  வட்டார கல்வி  அலுவலர்  செல்வலட்சுமி, நெடுங்குளம்  அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்  ராஜேஸ்வரி,மற்றும் அப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்களை  அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்






75வது சுதந்திர தின விழாவில் நாட்றம்பள்ளி ஒன்றியம் K பள்ளத்தூர் கொரானா Lockdown - லிருந்து கந்திலி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி .சித்ரா அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் தேசப்பற்று மற்றும் கொரானா விழிப்புணர்வு ஒயிலாட்ட நடனங்கள்








ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்!

Sunday, July 12, 2020


பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு


பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் அன்பழகன் விளக்கம்


மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்!


பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி முழு விவரம்


தபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..


ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

Saturday, June 27, 2020

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடாதது, ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாணையை காட்டி, மாவட்ட கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இது குறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் கூறியதாவது

பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது

சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு மட்டுமே நிறுத்தப்பட்டது.

ஆனால் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தர மறுக்கின்றனர். ஏற்கனவே அகவிலைப்படியை நிறுத்திய நிலையில் ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது

இதுகுறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர் துறை இயக்குநர்கள், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு தெளிவான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று (25/06/2020) 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Thursday, June 25, 2020


அம்மி மிதிப்பதும், அருந்ததி பார்ப்பதும் ஏன்?


ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?


சி.பி.எஸ்.இ தேர்வுகள் ரத்து !! மத்திய அரசு தகவல்...

வாகனங்கள் வெளிவிடும் புகையை எதற்காகச் சோதிக்கிறார்கள்?


முதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு செல்வக்குமார்

நடைமுறை வாழ்வில் கணிதத்தை எவ்வாறு பயன்படுத்துவது? ஆசிரியா்களுக்கு இணையவழியில் பயிற்சி


2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம்..! மத்திய அரசு அறிவிப்பு


PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020


30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Wednesday, June 24, 2020


தமிழகத்தில் இன்று ( ஜூன் 24 ) மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று


கல்லூரி தேர்வுகள் இரத்து?.. அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.!!

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!


அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!


CM Press release today!

கொரோனாவால் வேலையில்லாத நிலை; தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்யும் தலைமை ஆசிரியர்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இருக்கக்கூடிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரனா சிகிச்சையை இணைத்து தமிழக அரசு உத்தரவு

சுழற்சி முறையில் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

புதிய திட்டம்! ஆசிரியர்கள் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவ...சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

“குளிர்சாதனப் பெட்டியை அப்படியே வீட்டினுள் திறந்து வைத்தால் வீடு முழுவதும் குளிர்ச்சி ஆகிவிடுமா?


மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கத்தால் ஜூலை 1 முதல் அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிக்கல்

இரவில் மரத்தின் கீழ் படுத்து உறங்கக் கூடாது எனக் கூறக் காரணம் என்ன? பகலில் படுத்து உறங்கலாமா?


Surprise Visit - BEO மற்றும் பணியாளர்களை கண்டித்த CEO - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து செயல்முறைகள்

அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு மாவட்டக் கருவூல அலுவலர் அரசுக்கு கடிதம் அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020 ஆசிரியர்களுக்கு பொருந்துமா என விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் அரசின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்டக் கருவூல அலுவலர் அம்மாவட்ட அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலர்களுக்கும் கடிதம் !!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..

ஆசிரியர்களை கொரோனா பணியில் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்..!! தமிழக அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!


5-வது கட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு?....மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் அவசர ஆலோசனை

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்க வழக்கு!


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One