எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில் உருவாக்கப்பெற்ற தொடுதிரையுடன் கூடிய SMART CLASS ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை

Saturday, March 31, 2018










ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்தலையூர், கோபி ஒன்றியம், ஈரோடு மாவட்டம்.
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருந்தலையூரில் 23.3.2018 அன்று அறுபெரும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
1. விளையாட்டுவிழா
2. பாரம்பரிய உணவுத் திருவிழா.
3. முன்னாள் மாணவர் பேரவை துவக்கவிழா.4. பள்ளி ஆண்டுவிழா. 5.புரவலர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுவிழா.
6. வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டுவிழா.
   ஆண்டுவிழா சிறப்பாக நடக்க அனைத்து உதவிகளையும்  செய்தவர்கள்....
1. பொன்னாச்சியம்மன் மகளிர் சுய உதவிக்குழு.
2. ஆதிசக்தி மகளிர் சுய உதவிக்குழு.
 3. குபேரன் மகளிர் சுய உதவிக் குழு.
    அடுத்த நாள் (24.3.2018) ஏழாவது விழாவாக *SMART CLASS திறப்புவிழா* நடைபெற்றது. ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்(ரூ80,000) பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில்  உருவாக்கப்பெற்ற *தொடுதிரையுடன் கூடிய SMART CLASS* ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப.  அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. EMR என்கிற கே.ஆர்.இராஜகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
      SMART CLASS- ல் தற்போது 10 கணினிகளும் , 3 மடிக்கணினியும், ஒரு தொடுதிரையுடன் கூடிய ஸ்மாட் போர்டும் உள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One