புதுக்கோட்டை,ஜீலை.19:ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை நகரில் உள்ள சந்தைப்பேட்டை மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 50 ஏழை மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது...
விழாவிற்கு பள்ளித் தலைமைஆசிரியர் கோ.அமுதா தலைமை வகித்தார்..
தமிழாசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றுப் பேசினார்..ஏ.ஆர்.எம்.குழும நிறுவனர் ஹாஜி.ஹசன் முகமது முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பை நடத்தி வரும் நாணயவியல் கழக தலைவர் ஹாஜி.பஷீர் அலி மாணவிகளுக்கு சீருடை வழங்கிப் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்..இப்பள்ளியில் பயன்படுத்த இயலாமல் இருந்த கழிப்பறையை பழுதுபார்த்து எம் அமைப்பின் மூலம் மாணவிகளின் சிரமத்தை தீர்த்து உள்ளோம்..மேலும் இப்பள்ளியில் ஏழை மாணவிகள் 50 பேருக்குசீருடை வழங்கியும்,பள்ளிக்குமைக் வழங்கியும் உதவி செய்து உள்ளோம்..எங்களது நோக்கமே அரசுப் பள்ளிகளுக்கு உதவி செய்வதே என்றார். விழாவில் கவிஞர் நா.முத்து நிலவன் சிறப்புரையாற்றினார்..பள்ளிக் கலவி பாதுகாப்பு இயக்க மாவட்டப் பொறுப்பாளர் செல்வா,முதுநிலை தமிழாசிரியர் பரமசிவமல ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்..முடிவில் தமிழாசிரியர் சுமதி நன்றி கூறினார்..விழாவில் ஏராளமான பெற்றோர்கள்,கல்வி குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை கீதா செய்திருந்தார்..
No comments:
Post a Comment