எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

Thursday, January 31, 2019




அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மாணவர்கள் நலன், பொது மக்களுக்கான பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்தவர்களை வழக்கு ஏதுமின்றி விடுதலை செய்யவும், துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One