எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மாணவர்கள் மரம் நட்டால் மாதத்துக்கு 2 மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

Wednesday, August 28, 2019




மாணவர்கள் 3 மரங்கள் நட்டால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 10வது மாநில மாநாடு மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்த கடமை சாரண சாரணியர்  இயக்கத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் அதிகம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரங்களை நடுவதற்கு கடமையில் அரசும் உள்ளது. அதன் அடிப்படையில் 3 மரங்கள் நட்டால் மாணவர்களுக்கு மாதத்துக்கு 2 மதிப்பெண் வழங்கலாம் என்ற திட்டம் அரசுக்கு உள்ளது.

இந்தியாவிலேயே கல்விக்கென முதன் முதலில் தொலைக் காட்சி தொடங்கியது தமிழகம் தான். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மாணவியருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 40 சதவீத மாணவர்கள் தான் உயர்கல்விக்கு செல்கின்றனர். மீதமுள்ளவர்கள் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One