எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தலைமை செயலர் எச்சரிக்கை

Wednesday, January 30, 2019




தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலைக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து துறை செயலர்களுக்கும், கிரிஜா அனுப்பியுள்ள கடிதம்:இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பளம் வழங்க கூடாது. பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும். இன்று, அரசு ஊழியர்கள் யாருக்கும், தற்செயல் விடுப்பு வழங்கக் கூடாது.அனைத்து துறை தலைவர்களும், தங்களுடைய துறையில் உள்ள மொத்த ஊழியர்கள்; வேலைக்கு வந்தவர்கள்; வராதவர்கள்; ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தவர்கள் விபரத்தை, இன்று காலை, 10:30 மணிக்குள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One