எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஏப்ரல்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

Tuesday, March 26, 2019


திருவாரூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விடுமுறையான ஏப்ரல் 1-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One