எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வல்லுநர் குழு அறிக்கையினை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருமா?

Tuesday, August 27, 2019




ஓய்வூதியம் பற்றி அறிக்கை சமர்ப்பித்து 10 மாதமாகியும் வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை இல்லை

பரிதவிப்பில் அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்து 10  மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால், அரசு ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை விதிமுறைப்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்  மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால் ஓய்வுபெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப் பலன்கள் கிடைக்கவில்லை.


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One