எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு பள்ளியில் திருவள்ளுவர் ஆண்டு விழா

Tuesday, January 21, 2020




 சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் திருவள்ளுவர் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஆங்கில ஆண்டுடன் திருவள்ளுவர் வாழ்ந்த காலமான கி.மு. 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2020+31=2051. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு  அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் , 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.என கூறினார்.பின்னர் திருவள்ளுவர் ஆண்டான 2051 குறிக்கும் விதமாக 2051 வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்*

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One