எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளது - பிரதிபலன் பாராமல் பணியாற்ற வலியுறுத்தல் - CEO Letter

Sunday, April 5, 2020




காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு,

பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி  தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும்.

மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One