எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஐ.ஐ.டி-யில் சேர்க்கத் திட்டமா... விண்ணப்பிக்கவேண்டிய நேரம் இது!

Monday, September 3, 2018

ஐஐடி - ஜேஇஇ (IIT - JEE) தேர்வு
எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய அரசின் தேசிய தகுதித்தேர்வு நிறுவனம் (National Testing Agency). இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி (IITs)-க்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம்.
`ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என்று நுழைவுத் தேர்வை நடத்தவுள்ள தேசிய தகுதித் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை ஐஐடி-ஜேஇஇ முதல்நிலை (IIT JEE Main Exam) நுழைவுத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திவந்தது.

தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பொறியியல்
கல்லூரிகளில் 77 சதவீதம் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 332 பொறியியல் கல்லூரிகளில் 16 ஆயிரத்து 728 எம்.இ.; எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் சேருவதற்காக நடத்தப்பட்ட கேட் மற்றும் டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது.


CPS Missing Credit Form


SPD PROCEEDINGS-SSA TamilNadu-Instruction to all CEOs to communication the information sent by MHRD that celebration of 125th year of Swami Vivekananda on 11.09.2018



EMIS பணி 100% மிகச் சரியாகவும், மிக எளிமையாகவும் செய்வதற்கான சில ஆலோசனைகள்:


EMIS வேலையை ஆசிரியர்களிடம் தருவதை விட BRTE யிடம் ஒப்படைக்கலாம்.

 கிட்டத்தட்ட45,000 பள்ளிகளிலிருந்து சுமார் 60,000 க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்ய முனைவதால், சர்வர் மெதுவாக இயங்குகிறது. இதனால் யாருமே தகவல்களை உள்ளீடு செய்ய இயல வில்லை.

ஒரு மாதம் ஆசிரியப் பயிற்றுநர்கள் பள்ளிப் பார்வையை தவிர்த்து விட்டு, எமிஸ் பணியை செய்தால் (3500 ஆசிரியப் பயிற்றுநர்கள் மட்டுமே) எமிஸ் இணைய தளம் விரைவாக இயங்கும்.

 தகவல்கள் மிகச் சரியாக உள்ளீடு செய்யப் படும்.


எளிய அறிவியல் விளையாட்டு - கற்பூரப் படகு ›

ஆத்திசூடி- அறம் செய விரும்பு

ஆத்திசூடி- அறம் செய விரும்பு
Click here to read more


சேலத்தில் 1,080 சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடமணிந்து உலக சாதனை


சேலம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சேலத்தில் 1,080 சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடமணிந்து அணிவகுத்து நின்று உலக சாதனை நடத்தினர்.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில்1,080 குழந்தை கிருஷ்ணர்கள் பங்கேற்கும் சர்வம் கிருஷ்ணமயம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மூன்று வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் கிருஷ்ணன் வேடம் அணிவித்து சாதனை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர்.
இதற்காக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,080 மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடமிட்டு புல்லாங்குழல், கிரீடம் அணிந்து வந்து பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நின்றனர். பின்னர் உலக சாதனை நிகழ்ச்சியாளர்களான ரெக்கார்ட் அகாதெமி, எலைட் உலக சாதனை, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட், இந்தியன் ரெக்கார்ட் ஆப் அகாதெமி, தமிழன் புக் ஆப் அகாதெமி ஆகிய சாதனை நிறுவனங்களின் நடுவர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமிகள் 1,080 பேரும் வேட்டி உடுத்தி, உடல் முழுவதும் நீலச் சாயம் பூசிக் கொண்டு, தலையில் கீரிடம் சூடி, கைகளில் புல்லாங்குழல் பிடித்து வாசித்தபடி கிருஷ்ணர் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்தினர். ஸ்ரீ
வில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார செண்பகமன்னார் ஜீயர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சரவணன், தென் பாரத அமைப்பாளர் நாகராஜன், மாவட்டத் தலைவர் மணி, ஆர்.எஸ்.எஸ். வட தமிழ்நாடு தலைவர் கே.குமாரசாமி, ஜெய்ராம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரபிரசாத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நளினி ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சிறுவர், சிறுமிகளின் இந்த சாதனை நிகழ்ச்சி உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்கள் மேடையில் அறிவித்தனர்.


வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி


ஆசிரியர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் அட்வைஸ்



வரலாற்றில் இன்று ( 03.09.2018)


செப்டம்பர் 3 (September 3) கிரிகோரியன் ஆண்டின் 246 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 247 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.
1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1260 – பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும்.
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. பாரிசில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியாவிடம் இருந்து அதிகாரபூர்வமாக விடுதலை அடைந்தது.
1798 – பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.
1801 – இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1855 – நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1878 – தேம்ஸ் நதியில் “பிரின்சஸ் அலைஸ்” பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1914 – அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.
1933 – சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை (7495 மீ) யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.
1971 – கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
2004 – ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.09.18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.09.18

திருக்குறள்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம்:

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

பழமொழி

A hasty man never wants voe

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

மனிதன் தோல்வியின் மூலமே
புத்திசாலி ஆகின்றான்.

          - விவேகானந்தர்

பொது அறிவு

1.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி 12

2. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 மார்ச் 15

English words and. Meanings

Victory.  வெற்றி
Vitamin.  ஊட்டச்சத்து
Verify.     சரிபார்த்தல்
Virtues.   நல்லொழுக்கங்கள்
Vocabulary சொற்களஞ்சியம்


5-ம் வகுப்பு தகுதியுடைய 62 ‘பியூன்’ வேலைக்கு 82,000 பட்டதாரிகள் விண்ணப்பம்

 5-ம்வகுப்பு படித்தால் போதுமானதாகக் கருதப்படும்
பியூன் வேலைக்கான 62 காலியிடங்களுக்கு 82 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளது வேலையின்மையின் உச்சத்தைக் காட்டுகிறது

உத்தரப் பிரதேச காவல் துறையில், தொலைத்தொடர்பு துறையில் காலியாக இருக்கும் 62 பியூன் இடங்கள் நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 81 ஆயிரத்து 700 பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் ஊதியம் ரூ.20 ஆயிரமாகும்.

நாட்டில் வேலையின்மை குறைந்துவிட்டதாகவும், ஆண்டுக்கு ஆண்டு வேலைவாய்ப்பு பெறுபவர்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், வேலையின்மையின் உச்சத்தால் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றவர்கள்கூட பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கும் சூழல் வந்துவிட்டது.

இது குறித்து உத்தரப்பிரதேச காவல் துறையின் தொலைத்தொடர்பு துறையின் ஐஜி பிரமோத் குமார் கூறுகையில், ''எங்கள் துறையில் கடைநிலையில் உள்ள செய்தி அனுப்பும், பெறும் பொறுப்பு, அலுவலக உதவியாளர் ஆகியவற்றில் 64 காலியிடங்கள் இருப்பது குறித்து விளம்பரம் செய்திருந்தோம்.

இந்த வேலைக்காக 50 ஆயிரம் பட்டதாரிகள், 28 ஆயிரம் முதுகலைப் பட்டதாரிகள், டாக்டர் பட்டம் பெற்ற 3,700 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தகுதிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய மொத்தமுள்ள 62 காலியிடங்களுக்கு 93,500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதில் எம்.சி.ஏ, எம்.பி.ஐ, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் வரை அடங்கும்.

முதலில் இந்த பியூன் பணிக்கு வருபவர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இப்போது எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


EMIS இணைய பதிவில் ஏகப்பட்ட மாற்றங்கள்

பள்ளி கல்வி மேலாண்மை இணையதளத்தில்
விபரங்களை பதிவு செய்ய, கல்வித்துறை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை அறிவிப்பதால், பதிவுகளை நிறைவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் பள்ளி விபரம், பெற்றோர், ரத்தவகை, எடை உட்பட பத்துக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கி, ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கும் திட்டம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கான விபரங்களை பதிவேற்றம் செய்ய, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) கொண்டு வரப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் விபரங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, கல்வியாண்டு தோறும், பள்ளிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இதன்படி, பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.வழக்கமான தகவல்களோடு, கூடுதலாக சில பதிவுகளை மேற்கொள்ளவும், திடீர் அறிவிப்புகளும் வழங்கப்படுகின்றன. இப்பதிவுகளை மேற்கொள்ளும் போது, சர்வர் பிரச்னை, ‘நெட்வொர்க்’ கிடைக்காமலும், நள்ளிரவிலும் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


நீட்' பயிற்சிக்கு வராமல், 'டிமிக்கி' : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

நீட்' தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும்,
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

*பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்


*இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர்


*சவால்

*அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது


*இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 - 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது


*இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது


*இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது


*இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது


*ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர்


*இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்


10, பிளஸ்-2 மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய தேர்வு மையங்கள்


புத்தக தயாரிப்பில் தொய்வா? : பள்ளி கல்வித்துறை விளக்கம்

புத்தக தயாரிப்பில் தொய்வா? : பள்ளி கல்வித்துறை விளக்கம்
பாட புத்தக தயாரிப்பு பணிகளில், தொய்வு இல்லை' என, பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது

*தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றும் பொறுப்பு, பள்ளி கல்விச் செயலராக. பணியாற்றிய, உதயசந்திரன் வசம் இருந்தது.

*நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு களுக்கு, புதிய பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன


*மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாக உள்ளன


*இந்நிலையில், பாட புத்தக தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் எழுத்தாளர்கள், மேடை பேச்சாளர்கள் பலர், பாட புத்தக தயாரிப்பு மற்றும் அதன் அம்சங்களில்
*தங்கள் கருத்துகளை திணிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.


*அதற்கேற்ற வகையில், புதிய பாடத்திட்ட பணிகளை கவனித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதய சந்திரன், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார். அதனால், பாட புத்தக தயாரிப்பு பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.


*இந்தச் சூழலில், பாடத்திட்ட தயாரிப்பு வல்லுனர் கள் குழுவின் கூட்டம், சில தினங்களுக்கு முன், குழு தலைவர் பேராசிரியர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.


சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது"

Sunday, September 2, 2018

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது"


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -03-09-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

- ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு

2.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்



மாணவர்களின் எதிர்காலம் எங்களுடைய இதயம்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


அசத்தலாய் ஓர் ஆசிரியர் தின விழா


கல்வியாளர்கள் சங்கமம் எதிர்வரும் ஆசிரியர் தினவிழாவினை முன்னிட்டு கனவு ஆசிரியர்களும்,கலாம் மாணவர்களும் என்னும் பெயரில் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் இன்று செப்டம்பர் 1 அன்று ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை அரங்கேற்றியது.


இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ஹயாசிந்சுகந்தி தலைமை வகித்தார்.

விழாவின் தொடக்க உரையை தமிழக தொல்லியல் துறைச் செயலாளர் திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களின் வாழ்த்துச்செய்தியோடு தொடங்கிய கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தனது தொடக்க உரையில் ஆசிரியர்களின் பணிநிலை கடந்து, சார்ந்துள்ள இயக்கங்கள் கடந்து தன்னார்வத்துடன் ஒன்றினைந்து தொடர்ந்து ஒன்றுபட்டு இயங்கிவருவதால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்துப்பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் திரு. நந்தகுமார் இ.வ.ப அவர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் ஆளுமைகளைக் கண்டறிந்து, எந்த ஆசிரியர் மீட்டெடுக்கிறாரோ அவரே! கனவு ஆசிரியர் எனக்குறிப்பிட்டதோடு, ஆசிரியர்கள் மாணவர்களை இந்த சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றும் வேலையினைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். தோல்வியிலிருந்து மாணவர்கள் தன் தோல்விக்கான காரணம் தேடினால் வெற்றி தானே கிட்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசியது அழகு.

மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஹரிஹரன் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்பாளர்களோடு பயன்படுத்தும் விதம் கலந்துரையாடல் செய்தார்.அதில் ஆசிரியர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

இந்நிகழ்வில் திருப்பூர் ஆசிரியை ஜீலி அவர்களின் கவிதை நூல்வெளியீடு, மாணவர்களின் தனித்திறன் நிகழ்வுகள், ஆசிரியர் கலந்துரையாடல் என நிகழ்வு சிறப்பாக அமைந்தது..

மாநிலம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட ஆசிரியர்கள்,  பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவர்கள் என 600 க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களோடு நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.

மணம் முடித்த கையோடு பள்ளி வளர்ச்சிக்கு உதவிய மணமக்கள்: குவியும் பாராட்டுக்கள்!






திருமணம் முடிந்ததும் மணமக்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்தார்கள். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் மணமக்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

நெல்லை மாவட்ட மானூர் அருகே இருக்கிறது, கருவநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதை விடவும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டும் நிகழ்வு குக்கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. அதனால் இந்தப் பள்ளியில் குழந்தைகளே இல்லாமல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதனால் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து பள்ளியில் எ.ல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க நடவடிக்கை எடுத்ததுடன், கிராமத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவு செய்தார்கள். அதற்கு ஏற்ற வகையில், பள்ளியில் கம்ப்யூட்டர் வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, தரமான இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிக்கப்பட்டது.

இளைஞர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் முயற்சியால் அந்த தொடக்கப் பள்ளியில் தற்போது 60-க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். கருவநல்லூர் கிராம மக்களின் சிந்தனையில் பள்ளியின் வளர்ச்சி நிறைந்துள்ளது. அதனால் திருமணத் தம்பதிகள் கூட பள்ளிக்கு உதவும் நிகழ்வு நடந்திருக்கிறது. கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெய்லரான வேல்குமாருக்கும் உஷாவுக்கும் கடந்த 30-ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.



Globe Teacher Award 2018


உலக அளவில் கனவு ஆசிரியர்

அகதி மாணவர்களுக்காக,  அகதி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க 35 மொழிகளை பேசுவதற்குக் கற்றுக்கொண்ட ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது 7 கோடி பெற்ற லண்டன் நகரைச் சேர்ந்த #அண்ட்ரியா #ஸாஃப்ராகெள (Andria Zafirakou)

35 தாய்மொழி புலமை, மாணவர்களைக் காப்பாற்றிய தைரியம், பாக்ஸிங் கிளப் - உலகின்  அற்புத ஆசிரியை!

”எங்கள் மாணவர்களில் பலரும் மிகவும் சவாலான சூழ்நிலையில் சேரியில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு மிகவும் கடினமானது. ஆனால், இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வீட்டில் அவர்களுக்கு எத்தகைய சூழ்நிலை இருந்தாலும், வாழ்வில் எதை இழந்திருந்தாலும், எங்கள் பள்ளியை அவர்களுடையதாக நினைப்பார்கள். காலை 6 மணிக்குப் பள்ளியைத் திறப்பதாகச் சொன்னால், அவர்கள் 5 மணிக்கே நீண்ட வரிசையில் வந்து நிற்பார்கள். அதுதான் அவர்களின் தனித்துவம்”

சமீபத்தில், துபாயில் மிகப் பிரமாண்டமாக நடந்த ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது பெற்ற லண்டன் நகரைச் சேர்ந்த அண்ட்ரியா ஸாஃப்ராகெள (Andria Zafirakou), மேடையில் சொன்ன வார்த்தைகள் இவை.

தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, நார்வே, பெல்சியம், இந்தியா  உள்ளிட்ட 173 நாடுகளிலிருந்து வந்த 30,000 போட்டியாளர்களை வென்று, இந்த விருதைப் பெற்றிருக்கிறார் அண்ட்ரியா. அப்படி என்ன சாதித்திருக்கிறார் இவர்?

லண்டனில் உள்ள ஒரு சிறிய பகுதி, பிரண்ட் (Brent). பொருளாதாரத்திலும் சமுதாய வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கிய அகதி  குடும்பங்கள் வசிக்கும் சேரி பகுதி இது. இந்தப் பகுதியில் ரெளடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகம். பள்ளி பேருந்துகளிலும் ஏறி, தங்கள் கும்பலில் சேருமாறு மாணவர்களை ‘வேலை’க்கு எடுக்கும் முயற்சி செய்வார்கள். 35 மொழிகள் பேசும் மக்கள் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். எனவே, அந்த மாணவர்களை நன்கு புரிந்துகொள்வதற்காக, 35 மொழிகளிலும் பேசுவதற்குக் கற்று வெற்றிக்கொண்டார் அண்ட்ரியா.


31.08.2018 -முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம்!!



10th - Slip Test 2018-2019 - CEO Vellore


TEACHING AND LEARNING 50 MOBILE APPLICATIONS


தொடக்க நிலை மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பிக்க உதவும் எளிய கற்றல் கற்பித்தல் -  செயலிகள் மற்றும் பொதுவான செயலிகள் விளக்கத்துடன்!!


மாணவர்களிடம் ஆளுமையை வளர்ப்பவர்களே கனவு ஆசிரியர்கள் :வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் v.நந்தகுமார் பேச்சு..


காரைக்குடி,செப்.2
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் என்ற ஆசிரியர்களின் கூடல் நிகழ்வு நடைபெற்றது..விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஹயாசிந் சுகந்தி தலைமை வகித்தார்..



வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் v.  நந்தகுமார் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப்  பேசியதாவது:



வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் அடையாளம் காட்டினால் அது போலி அழகு தான்.நிஜம் என்பது வேறு திரையில் காண்பது வேறு ..நேரிடை அனுபவங்கள் மட்டுமே நமக்கு உண்மையை உணர்த்தும்.ஒவ்வொரு மனிதனின் அதிக மறக்க முடியாத நாட்களாக நினைத்தோம் என்றால் அவர்களது மறக்கமுடியாத சந்தோசமான நிகழ்வுகளும்,சோகமான,துயரமான,வருத்தமான சம்பவங்களும் தான் இருக்கும்.....



ஆசிரியர் பணி என்பது மிகப்பெரிய உணர்வான வேலை...எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் பள்ளியில் அமர்ந்துள்ள மாணவர்களின் முகத்தை வைத்து அவர்களோடு சேர்வதற்கும் ,மாணவர்கள் ஒவ்வொருவரின் மனதிற்குள் உங்களை ஈர்க்கும் படி  ஆளுமையால் நீங்கள் அவர்கள் மனதில் இடம் பிடித்திருக்க வேண்டும் ..இன்றும் எனக்கு  ஒன்றாம் வகுப்பு பாடம் எடுத்த பாத்திமா ஆசிரியையும்,ஆறாம் வகுப்பு எடுத்த பாலதண்டாயுதம் ஆசிரியர்களும் தான்.காரணம் அவர்கள் நடந்து கொண்ட விதம் தான்...மேலும் ஆசிரியர்களாகிய நீங்கள் உங்களை சுற்றியுள்ள விஷயங்களை நீங்கள் படித்தாலே அது தான் உங்களுக்கு புத்தகம்.வாழ்க்கையில் தோல்வி வரும் போது எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்பவர்களே கலாம் மாணவர்கள்..தோற்றதை எண்ணி வாழ்வை வீணாக்குபவர்கள்  கிடையாது... ஆசிரியர்கள் மாணவர்களை தகுதியான மாணவர்கள் தகுதியற்ற மாணவர்கள் என்று தரம்பிரிப்பது தவறு .யாரிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை எந்த ஆசிரியர் வெளிக்கொண்டு வருகிறார்களோ அவர்களே கனவு ஆசிரியர்கள்..தோல்விக்கும் வெற்றிக்கும் ஒரே கூறுகள்  தான்..தோற்கும் மாணவர்கள் தோல்வியின் அடையாளத்தை கண்டு ஏன் தோற்கிறோம் எப்படி தோற்கிறோம் என்பதை பின் நோக்கி பார்க்க வேண்டும்..அப்படி பார்த்தால் எளிதில் வெற்றி பெற்று விடலாம்..ஆசியர்களும் மாணவர்களிடம் தோற்பதற்கான காரணம் என்ன என்பதை அவனையே கண்டுபிடிக்க சொல்ல வேண்டும்.. மாணவர்களிடம் ஆளுமையை உருவாக்கும் அத்தனை ஆசிரியர்களும் கனவு ஆசிரியர்கள் தான் ...முட்டாள் முட்டாள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட நான் உண்மையிலேயே முட்டாளா என எனக்குள் நான் தேடிய தேடலில் என்னை இந்த உயரத்தில் ஒதுக்கியுள்ளது..முட்டாள் என்று ஒதுக்கப்பட்ட நானே தேடலில் இந்த உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் பொழுது அறிவார்ந்த சமுதாயமாக உயர்ந்து நிற்கும் மாணவர்களின் உயரம் என்னவாக இருக்கும்.கற்பனை செய்து பாருங்கள் ..இதை தான் கலாம் அவர்கள் சொன்னார் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி..அதற்கு ஆக சிறந்த உதாரணம் தோல்விகளால் துரத்தப்பட்டு  வெற்றியின் எல்லைக் கோட்டை அடைந்த நானே ஆவேன் என்றார்..



மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர் ஆர். ஹரிஹரன் பேசியதாவது: நான் நிறைய ஆசிரியர்களை கடந்து வந்துள்ளேன்.
தன்னார்வமிக்க ஆசிரியர்கள் கூட்டத்தில் கல்வியாளர்கள் சங்கமம் வடிவில் இன்று தான் காண்கிறேன்..
இந்நிகழ்வில் கலந்து கொண்டது தனக்கு மிகப்பெரிய திருப்தி அளிக்கிறது.எங்களது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் 2005 ஆண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித்துறையோடு இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம்..கிட்டத்தட்ட 40 ஆயிரத்நிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்..நான்கு மாதங்களுக்கு முன்பு  ஆபிஸ் 365 என்ற கணினி சார்ந்த பயிற்சியினை முதற்கட்டமாக 70 ஆசிரியர்களுக்கு அளித்து உள்ளோம்..அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அளிக்க உள்ளோம்..மேலும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மூலம் இனோவேட் எஜீகேட்டர் என்ற ஒரு புரோகிராம் வழங்கி கொண்டிருக்கிறோம்.





இனோவேட் எஜீகேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த ஆசிரியர்களை கம்போடியோ,வியட்நாம்,அமெரிக்கா,பிரேசில் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்..எங்களது பயிற்சியின் நோக்கமே வகுப்பறையில் கணினி மூலம் பாடம் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் வாயிலாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே..எங்களது மைக்ரோசாப்ட் மூலம் கோர்ஸ் பயில விரும்புபவர்கள்  www.outlook.com இல் மெயில் ஐடி உருவாக்கி education.Microsoft.com இல் பதிவு செய்து ஆன்லைன் மூலம் படிக்க முடியும் என்றார்..


DSE PROCEEDINGS-10th,11th,12th Standards - Quarterly Exam Official Common Time Table 2018-2019 - Date: 1.9.2018




எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு 10-ந்தேதி தொடங்குகிறது


அரசு ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் பீதி


தமிழகத்தில் எழும் வேதனை குரல்கள்

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


பள்ளிகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் தயக்கம் காட்டும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 260 நடுநிலைப்பள்ளிகள், 3,044 உயர்நிலைப்பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 959 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் 64 ஆயிரத்து 855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50 ஆயிரத்து 508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27 ஆயிரத்து 891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73 ஆயிரத்து 616 ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.





இந்த பள்ளிகளில் 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளிகளில் 25 லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24 லட்சத்து 67 ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் 42 லட்சத்து 86 ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இதில் ஆண், பெண் ஆசிரியர்கள் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் பள்ளியில் பாகுபாடின்றி காலிபணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் பணியாற்ற மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியர்களிடம் அதேபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாணவர்களின் எல்லைமீறலை வெளியே சொல்ல முடியாமல் ஆசிரியைகள் பிரச்னைக்குரிய பள்ளிகளை விட்டு வெளியேறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதேபோல் தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியைகளுக்கு நேரடியாகவே மாணவர்கள் மிரட்டல்கள் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. மாணவர்களை ஏற்றிவிடும் ஏணிப்படியாக இருக்கும் ஆசிரியைகள் இப்படிப்பட்ட பல இன்னல்களை சந்திப்பதாக வேதனை குரல் எழுப்புகின்றனர்.


ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் பாதுகாப்பற்ற சூழலிலேயே பணியாற்றி வருகின்றனர். ஆண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறுவது போல் பெண் ஆசிரியைகள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதால் இதனை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்ற தோன்றுகிறது

பெண் ஆசிரியைகள் கூறுகையில், ‘அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை குறைகூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட சதவீதம் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கமற்று நடந்து கொள்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

ஆனால் சில மாணவர்கள் அத்துமீறல் பேச்சை வெளிப்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் தொடக்கப்பள்ளிகளிலேயே பணியாற்றலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


அஞ்சல்துறை சார்பில் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளும் கடிதம் எழுதும் போட்டி "என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்"



பள்ளிக்கல்வி - SEP 1-15 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய "தூய்மை நிகழ்வுகள்" - இயக்குனர் செயல்முறைகள்

Saturday, September 1, 2018










Swachhta Pakhwada Activities- Day 01- Swachhta Pledge in Tamil.



6th TO 9th Standards - First Term Exam 2018 - Time Table Published

சேலம் மாவட்ட முதல் பருவத்தேர்வு கால அட்டவணை 2018-19.



இந்தியாவில் முதன்முறையாக 500 பள்ளிகளில் " அட்டல் டிங்கரிங் லேப் "- செங்கோட்டையன்



'NET ' - தகுதி தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்


தேனிமாவட்ட CEO க்கு தங்கச்சான்று விருது



TET - பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்ப தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் கூவக்காபட்டி சவும்யா உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:


பி.எஸ்சி.,(புவியியல்) பி.எட்., முடித்துள்ளோம். 2017 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சியடைந்தோம். 2017 ஜூலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 2014 ல் வெளியிட்ட அரசாணைப்படி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் முன்பு நிரப்பப்பட்டன.


இடை நிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்தவுகள் ரத்து? - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2019 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து 4வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட் செய்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?


இது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் வைத்துள்ள போதிலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பும்.

இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதனை விடக் குறைவாக உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அதனை நிராகரிக்கின்றனர். ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது அது பெரிய அளவில் பயன் அளிக்கும். அது குறித்து விளக்கமாக இங்குத் தளம் அளிக்கும் விவரங்களைப் படித்துப் பயன்பெறுக.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?


NEW SCHOOL VISIT FORMAT

காணொலி மூலம் புதிய பாட வகுப்புகள்'

பாடநூல்களை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கத்தில், புதிய பாடப் பகுதிகள் காணொலி வகுப்புகளாகவும், இணைய வளங்களாகவும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி தெரிவித்தார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (எஸ்சிஇஆர்டி) புதிய பாடத்திட்டம், பாடநூல்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆர்.ராமானுஜம், ஈ.சுந்தரமூர்த்தி, கு.ராமசாமி, கலா விஜயகுமார், எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செப். 3-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போஸ்டர்' வடிவமைப்புப் போட்டி

தமிழக அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்புப் போட்டி செப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், புதுதில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் (என்சிஇஆர்டி) இணைந்து அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் (அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள் நீங்கலாக) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டியை மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பள்ளி அளவில் இந்தப் போட்டி செப்.3-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும்.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட இரு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
அதன் பின்னர், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 2 வகையிலான புதிய வண்ண பள்ளிச் சீருடைகள் இந்த ஆண்டுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பிளஸ்-2 புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயார் இயக்குனர் தகவல்

பிளஸ்-2 புதிய பாடத்திட்டம்
டிசம்பர் மாதத்திற்குள் தயார்
இயக்குனர் தகவல்
           
அடுத்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட இருக்கும் புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயாராகி விடும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் தெரிவித்தார்.


1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அந்த பாடத்திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆகியவற்றுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் (2019-2020) நடைமுறைக்கு வரும்.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் ஆர்.ராமானுஜம், ஈ.சுந்தரமூர்த்தி, கு.ராமசாமி, ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் கலா விஜயக்குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

2, 7, 10, பிளஸ்-2 பாடநூல்கள் தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக அரசு வழங்கியுள்ள திட்டத்தின்படி பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது குறித்தும், பாடநூல்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு மாணவர்களிடம் சென்று சேர்ந்திருப்பது பற்றியும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


'எமிஸ்' பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி


இளைய தலைமுறையை ஈர்க்கும்: 'ஆப்பரேஷன் இ'பள்ளிகளில் ஆய்வு திட்டம் துவக்கம்: ஆசிரியர்களுக்கு கல்வித்துறை 'செக்'


இளைய தலைமுறையை ஈர்க்கும்: 'ஆப்பரேஷன் இ'பள்ளிகளில் ஆய்வு திட்டம் துவக்கம்: ஆசிரியர்களுக்கு கல்வித்துறை 'செக்'

NEW PROFESSIONAL TAX AMOUNT DETAILS

Friday, August 31, 2018

திருத்தியமைக்கப்பட்ட தொழில் வரி விவரம்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One